அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் அகவிலைப்படி உயர்வுகளை கணக்கிட 2013ம் ஆண்டு 7 வது ஊதிய குழு உருவாக்கப்பட்டது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி (DA) 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ராஜஸ்தான், அசாம் உள்ளிட்ட சில மாநிலங்களிலும் DA உயர்வு அறிவித்த கையோடு அடுத்ததாக ஜூலை மாதம் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் அரசு ஊழியர்களை வியப்பில் ஆழ்த்தும் படி 8 வது ஊதிய குழு உருவாக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக்குழு உருவாக்கப்படுவது வழக்கம். அதன்படி 2024ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு 8வது ஊதியக்குழு உருவாக்கக்கூடும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
ஆர்ப்பரிக்கும் கூட்டத்தை கட்டுப்படுத்திய கிங் கோலி…, பரிசு வழங்கி மனதை கவர்ந்த நிகழ்வு உள்ளே!!
இப்படியாக அறிவிக்கப்பட்டால் 2026 ம் ஆண்டுக்குள் அரசு ஊழியர்கள் எதிர்பாராத வகையில் ஊதிய உயர்வு, DA உயர்வு வழங்கப்படும் என பம்பர் செய்தியை வெளியிட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை மத்திய அரசு எப்போது வெளியிடுமோ? என ஊழியர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.