தமிழக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மீண்டும் முக்கிய அறிவிப்பு.., அன்பில் மகேஷ் விளக்கம்!!

0
தமிழக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மீண்டும் முக்கிய அறிவிப்பு.., அன்பில் மகேஷ் விளக்கம்!!
தமிழக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மீண்டும் முக்கிய அறிவிப்பு.., அன்பில் மகேஷ் விளக்கம்!!

தமிழ்நாட்டில் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் கல்வி, விவசாயம் என அனைத்து துறைகளிலும் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற பொதுத் தேர்வு குறித்த விவாதங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார். அதன்படி “நடப்பு கல்வியாண்டில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கொரோனா காலங்களில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆல் பாஸ் செய்யப்பட்டவர்கள்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் தொடர்ச்சியாக சுமார் 1.9 லட்சம் மாணவர்கள் மேற்படிப்புகளை தொடராமல் இடைநிற்றல் செய்தது தெரிய வந்தது. இதில் 1.25 லட்சம் மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 40,000க்கும் மேற்பட்டவர்கள் தான் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வராமல் ஆப்சென்ட் ஆகி உள்ளனர். தற்போது இந்த மாணவர்களை கண்டறிய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இடைநிற்றல் செய்த மற்ற மாணவர்களை கண்டறிந்து பொதுத்தேர்வு எழுத ஊக்கப்படுத்தவே வருகைப் பதிவு இல்லாமல் இருந்தாலும் சிறப்பு அனுமதியாக தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் மின்வாரிய காலிப்பணியிடங்களை மின்வாரியமே தேர்வு செய்யும்., அதிகாரிகள் கோரிக்கை!!!

விரைவில் ஆப்சென்ட் ஆன மாணவர்கள், இடைநிற்றல் செய்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து மறுதேர்வு நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சலுகை கொரோனா சூழ்நிலையால் கல்வி பாதிக்கப்பட்ட நடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தான். எனவே அடுத்த கல்வியாண்டு முதல் வழக்கம்போல் பொதுத்தேர்வு எழுத 75% வருகைப் பதிவு கட்டாயம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here