உலகமெங்கும் கொரோனா தாக்கத்தால் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். இதனால் பெண்கள் கருத்தடை சாதன வசதியை இழந்து உள்ளதால் உலகமெங்கும் 70 லட்சம் பெண்கள் எதிர்பாராத விதமாக கர்ப்பமடைய வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நிதியம் தெரிவித்து உள்ளது.
கருத்தடை சாதன வசதியின்மை:
இது தொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், உலகமெங்கும் உள்ள வருமானம் குறைந்த நாடுகளில், சுகாதார அமைப்புகள் மூடி இருப்பதால் கருத்தடை சாதன விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டு உள்ளது.
கொரோனவால் ஏற்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கு 6 மாதங்களுக்கு தொடரும் பட்சத்தில், 114 வருமானம் குறைந்த நாடுகளில் 4.7 கோடி பெண்கள் உரிய கருத்தடை சாதன வசதி இல்லாததால் 70 லட்சம் எதிர்பாராத கர்ப்பங்களை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குழந்தை திருமணம்:
பெண்கள் தங்கள் குடும்பத்தை திட்டமிடுவதற்கு, அவர்களின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் திறனை இழக்க நேரிடும் எனவும் கூறியுள்ளனர். மேலும் ஊரடங்கு காலத்தில் ஒவ்வொரு 3 மாதத்திலும், புதிதாக 1.5 கோடி பெண்களுக்கு எதிராக பாலின ரீதியான வன்முறை நிகழ கூடுமெனவும் , அடுத்த பத்தாண்டுகளில் 20 லட்சம் பெண்களின் பிறப்புறுப்பு சிதைவுகள் ஏற்படலாம் எனவும் தெரிவித்து உள்ளது.
மேலும் 1.3 கோடி பெண்கள் கட்டாய குழந்தை திருமணத்தில் ஈடுபடுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் ஐநா தெரிவித்து உள்ளது. இத்தகைய குற்றங்களை தடுக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |