4 மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைப்பு – குஷியில் வாகன ஓட்டிகள்!!

0

இந்தியாவில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள 4 மாநிலங்களில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை அதிரடியாக குறைத்துள்ளனர்.

பெட்ரோல் மற்றும் டீசல்:

கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் கச்சா எண்ணெயின் விலைகேற்ப எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை தொடர்ந்து அதிகரித்து வந்தனர். இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். மேலும் கடந்த கொரோனா காலத்தில் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீது கூடுதல் வரியை விதித்தது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.13 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.16 அதிகரித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த விலையை தற்போது வரை மத்திய அரசு குறைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இதனை குறைக்கும் வகையில் இந்தியாவில் உள்ள நான்கு மாநில அரசு அதிரடியான முடிவை எடுத்துள்ளனர். அதன்படி ராஜஸ்தான் மாநிலம் வாட் வரியை 38 சதவீதத்தில் இருந்து 36 சதவீதமாக குறைத்துள்ளது. மேலும் அசாம் மாநிலம் கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட வரியில் இருந்து ரூ.5 குறைத்துள்ளது. அதேபோல் மேற்கு வங்காள அரசும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியில் இருந்து ரூ. 1 குறைத்துள்ளது.

புதுச்சேரியில் ராஜினாமா செய்த எம்எல்ஏ சஸ்பெண்ட் – திமுக அதிரடி!!

இதனை தொடர்ந்து மேகாலய அரசும் பெட்ரோலுக்கு விதிக்கப்பட்ட வரியை 31.62 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைத்துள்ளது. மேலும் டீசலுக்கு விதிக்கப்பட்ட வரியை 22.95 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைத்துள்ளது. தற்போது இந்த மாநிலங்கள் வரியை குறைந்துள்ளதால் அந்த மாநிலத்தில் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here