அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி.., இவர்களுக்கு அகவிலைப்படி 4% உயரும்.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

0
அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி.., இவர்களுக்கு அகவிலைப்படி 4% உயரும்.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!
மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி குறித்த அறிவிப்பு எப்போது வரும் என ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் குஜராத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது மாநில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தற்போது வரை 42 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அகவிலைப்படியை மேலும் 4 சதவீதம் உயர்த்தி இனி வரும் நாட்களில் 46 சதவீதமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த அகவிலைப்படி உயர்வு குஜராத்தில் பணிபுரியும் 4.45 லட்சம் மாநில அரசு ஊழியர்களுக்கும், 4.63 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு பொருந்தும் என குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 2023 முதல் பிப்ரவரி 2024 வரை 8 மாதங்களுக்கான அகவிலைப்படி சம்பளத்துடன் மூன்று தவணைகளாக வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். தற்போது இந்த அறிவிப்பால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here