300 பயிற்சி மருத்துவர்கள் கொரோனா தடுப்பு பணியில் நியமனம் !!!
கொரோனா தொற்றால் சென்னையில் அதிகம் பாதிக்கப்படும் நிலையில் 300 பயிற்சி மருத்துவர்களை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
300 பயிற்சி மருத்துவர்கள் நியமனம்
சென்னையில் மட்டும் தினசரி 7000கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கொரோனா தடுப்புப் பணியில் அதிக மருத்துவர்களின் தேவை ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது சென்னை மாநகராட்சி பயிற்சி மருத்துவர்களை தடுப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளது. இந்த முடிவால் மருத்துவர்களின் தட்டுப்பாடு குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை அடுத்து 300 பயிற்சி மருத்துவர்களை நியமனம் செய்ய முடிவெடுத்துள்ள நிலையில், நாளை மே 13 ம் தேதி இந்த பணிக்கான நேர்காணல் நடத்தப்படும் என்றும், மே 14 ம் தேதி உடனடியாக பணியில் சேர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மாநகராட்சியின் இந்த முடிவால் 300 கூடுதல் பயிற்சி மருத்துவர்கள் நாளை மறு நாள் பணியமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.