ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத அமைப்பின் தலைவர் மற்றும் காஷ்மீரை சேர்ந்த 2 தீவிரவாதிகள் என 3 பேரை காஷ்மீர் பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர். இன்னும் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வந்துள்ளது. அவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் உள்ளனர்.
ஜம்முவில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்..
ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாத கும்பல் ஊடுருவி வருவதாக தகவல் வந்தது.அதை அறிந்த பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை தேடும் தீவிர பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது புல்வாமா நகரில் உள்ள ஒரு பகுதியில் தீவிரவாத கும்பல் சிலர் பதுங்கி இருப்பதாய் பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர். பின் பாதுகாப்பு படையினரை கண்ட தீவிரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். பின் இரு தரப்பினரும் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் தீவிரவாத கும்பலை சேர்ந்த 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்.
அந்த 3 பேரில் ஒருவர் பாகிஸ்தானின் லக்ஷர் – இ- தொய்பா அமைப்பின் முக்கிய தகவர் தலைவர் ஆவார். பின் மீதமுள்ள இரண்டு பேரும் காஷ்மீரை சேர்ந்த தீவிரவாதிகள் ஆவார்கள். இதன்பின் அவர்கள் பதுங்கி இருந்த இடத்தில இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த ஆயுதங்களை வைத்து பார்க்கையில் இன்னும் அதிகமான தீவிரவாதிகள் பதுங்கி இருக்க வாய்ப்புள்ளது. எனவே பதுங்கியிருந்து தப்பித்த தீவிரவாதிகளை தேடும் தீவிர பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்