சிவசங்கர் பாபா மீது 3 போக்ஸோ வழக்குகள் பதிவு!!!

0
சிவசங்கர் பாபா மீது 3 போக்ஸோ வழக்குகள் பதிவு!!!
சிவசங்கர் பாபா மீது 3 போக்ஸோ வழக்குகள் பதிவு!!!

பாலியல் புகார் வழக்கில் சிக்கிய சிவசங்கர் பாபாவை மீண்டும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் அவர்மீது மீண்டும் போக்ஸோ வழக்குக பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவசங்கர் பாபா மீது மீண்டும் ஒரு வழக்கு…

சென்னை கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி என்ற பள்ளி ஒன்றை நடத்தி வந்தவர் சிவசங்கர் பாபா. இவர் அந்த பள்ளியின் நிறுவனர் ஆவார். சில மாதங்களுக்கு முன் சிவசங்கர் பாபா அவரது பள்ளியில் படித்து வரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வருவதாக அவர் மீது முன்னாள் மாணவிகளும் நடிப்பில் பயிலும் மாணவிகளும் புகார் அளித்தனர். இதனை அறிந்த சிவசங்கர் பாபா தலைமறைவு ஆனார். அவரை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டனர். பின் டெல்லியில் இருப்பதாக தகவல் வந்தது டெல்லி விரைந்து அவரை கைது செய்து சென்னை கொண்டு வந்தனர். பின் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு இவர் மீது 2 போக்ஸோ வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது.

சிவசங்கர் பாபா மீது மீண்டும் ஒரு வழக்கு...
சிவசங்கர் பாபா மீது மீண்டும் ஒரு வழக்கு…

அதன்பின் சிவசங்கர் பாபாவை விசாரித்து அவரிடம் இருந்த மடிக்கணினி போன்றவற்றை கைப்பற்றினர் அதிகாரிகள். அதேபோல் இவரது பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்களும் இவருக்கு உடந்தையாக இருந்துள்ளனர். உடந்தையாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணியாகு அழைத்து சிபிசிஐடி, இந்நிலையில் இப்பொழுது வெளியில் இருக்கும் சிவசங்கர் பாபாவை மீண்டும் கைது செய்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர். அதுமட்டுமில்லாமல் இவர்மீது 2 போக்ஸோ வழக்கு இருக்கும் நிலையில் இவர்மீது மீண்டும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு 3 போக்ஸோ வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளனர் அதிகாரிகள்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here