தமிழக அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மழை, வெள்ளம், புயல் போன்ற நாட்களின் போது ஏற்படும் பாதிப்புகளுக்கு தகுந்த நிவாரணமும் அளித்து வருகிறது. இது மட்டுமல்லாமல் விபத்து காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் நிதி உதவிகளை அறிவித்து வருகிறார்.
அந்த வகையில் கன்னியாகுமரி குளச்சல் கிராமத்தை சேர்ந்த முகைதீன் யாசர் அலி சில நாட்களுக்கு முன் அரபிக் கடலில் தவறி விழுந்து காணாமல் போனார். இதன் காரணமாக இப்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணாமல் போன மீனவரின் குடும்பத்திற்கு 3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் அவரின் குடும்பத்திற்கு முதல்வர் ஆறுதல் தெரிவித்துள்ளார்.