நாடு முழுவதும் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் கட்டாயம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் மருத்துவப் படிப்பை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 5ம் தேதி நடைபெறும் என கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. தற்போது வரை இதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் அது முடிவடைந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறுவதால் மாணவர்கள் அனைவரும் அதில் தான் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் பலரும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே பிளஸ் 2 மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.