தமிழகத்தில் ஆண்டுதோறும் முதல் சட்டசபை கூட்டம் ஜனவரி மாதத்தில் நடைபெறுவது தான் வழக்கம். நடப்பாண்டில் முதலீட்டாளர்கள் மாநாடு, முதல்வர் வெளிநாடு சுற்றுப்பயணம் போன்ற காரணங்களால் இன்று (பிப்.12) தொடங்குகிறது. ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் என்பதால், ஆளுநர் ஆர்.என்.ரவி முதலில் உரையாற்றுவார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதில் புதிய அறிவிப்புகள் குறித்த விவரங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து வருகிற 19ஆம் தேதி 2024-25 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யப்பட உள்ளார். அதன்பின் 23ஆம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
தொடரும் போராட்டம்.., இந்த பகுதியில் 144 தடை உத்தரவு அமல்.., மக்கள் கடும் அவதி!!!