தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு, ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 16) அரசியல் கட்சியினர் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
24 மணி நேரத்தில் விஜய்யின் “விசில் போடு” பாடல் செய்த பிரம்மாண்ட சாதனை.. வெளியான முக்கிய தகவல்!!
அதாவது, தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த பிறகு சமூக வலைத்தளங்களில் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை, நாளை மாலை 6:00 மணிக்கு பிறகு சமூக வலைத்தளங்களில் பிரச்சாரத்தை பகிர்ந்தாலும் இரண்டு வருட சிறை, தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் நாளை மாலை 6:00 மணிக்குள் வெளியேற வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.