கேரளாவில் 2 மூதாட்டிகள் 4ஆம் வகுப்பு தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அச்சாதனையை பாராட்டும் விதமாக ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் மகளிர் தினத்தன்று விருது வழங்க உள்ளார்.
மூதாட்டிகள் சாதனை
கேரளாவை சேர்ந்த பாகீரதி மற்றும் கார்த்தியாயினி என்ற 2 மூதாட்டிகள் 4 ஆம் வகுப்பு தேர்வெழுதி அதில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 105 வயதான பாகீரதி என்ற மூதாட்டி 10 வயதில் தன் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டார். இப்பொழுது படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்குள் எழுந்ததால் 4 ஆம் வகுப்பு தேர்வு எழுதி அதில் 70% மதிப்பெண்களை பெற்றுள்ளார். அதை தொடர்ந்து கேரளா ஆலப்புழாவை சேர்ந்த 98 வயதான கார்த்தியாயினி 2018 இல் தேர்வெழுதி அதில் 98% மதிப்பெண் பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.
மகளிர் தின விழா
இவர்களில் சாதனையை பாராட்டும் விதமாக வருகின்ற 8-ந்தேதி டெல்லியில் நடைபெறும் மகளிர் தினவிழாவில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் விருது வழங்க உள்ளார்.
இதற்கிடையில் கொல்லம் மாவட்ட கலெக்டர் அப்துல்நாசர் பாகீரதி வீட்டிற்கு சென்று பாராட்டு தெரிவித்துள்ளார்.கார்த்திகாயினி இதைப்பற்றி கூறும்போது விமானத்தில் சென்று ஜனாதிபதியிடம் விருது பெறுவது மிகவும் பெருமையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |