அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிக்கு நிகராக கல்வி வழங்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் வருகிற கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு CBSE பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதன் காரணமாக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு CBSE பாடத்திட்டம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதன்படி CBSE பாடத்திட்டங்களை முதல் முறை மாணவர்கள் படிக்க இருப்பதால் தேர்ச்சி விகிதம் சற்று குறைவாவதற்கு வாய்ப்பு உள்ளது.
இதனை கருத்தில் வருகிற கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் CBSE பாடத்திட்டம் படிக்கும் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் செய்யப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.