உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியானது, லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் வரும் ஜூன் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்திய அணி மோத உள்ளது. இதற்கு பயிற்சி பெறும் வகையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தேர்வாகி உள்ள சர்வதேச இந்திய வீரர்களின் ஒரு குழு ஏற்கனவே லண்டனுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்நிலையில், இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பரிசு தொகை குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, இந்த தொடருக்கான இறுதிப் போட்டியை வென்று சாம்பியன்ஸ் பட்டத்தை தட்டி செல்லும் அணிக்கு 13.23 கோடியும், 2வது இடத்தை பிடிக்கும் அணிக்கு 6.61 கோடியும் அறிவித்துள்ளது.
அரசு பள்ளியில் பயிலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்., கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!!
மேலும், 9 அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் போட்டியில் அடுத்தடுத்த இடங்களை பிடித்த அணிகளுக்கும் பரிசு தொகை அறிவித்துள்ளது. அதாவது, தென் ஆப்பிரிக்கா (3.5 கோடி), இங்கிலாந்து (2.8 கோடி), இலங்கை (1.6 கோடி), நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பங்களாதேஷ் ஆகிய 4 அணிகளுக்கு தலா 82 லட்சமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையானது, தோராயமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.