உத்தரகாண்ட் மாநிலம் குருகிராமில் 15 வயது சிறுமியை அப்பாவே பாலியல் வன்கொடுமை செய்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை:
இன்றைய சூழ்நிலையில் உலகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சிறு குழந்தைகள் என பாராமல் பாலியல் வன்கொடுமை செய்யும் கீழ்த்தரமான வேலைகளை சில ஆண்கள் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். இந்த மாதிரி நபர்களுக்கு போக்சோ என்ற சட்டத்தால் தண்டிக்கப்பட்டாலும் கொஞ்சம் கூட குறைந்த பாடுஇல்லை. அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலம் குருகிராமில் உள்ள பகுதியில் ஒரு தந்தை தனது மகளுக்கு செய்த காரியம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது குருகிராமில் 36 வயதுடைய ஒருவர் தனது மனைவி மற்றும் 15 வயதுடைய சிறுமியுடன் வாழ்ந்து வந்தார். அந்த சிறுமி 10 வகுப்பு படிக்கும் நிலையில், NGOவில் ஒரு பெண்ணிடம் சில தகவல்களை தெரிவித்துள்ளார். அந்த பெண்ணிடம் தனது அப்பா 3 ஆண்டுகளாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன்னை பாலியல் கொடுமை செய்துள்ளார்.
மக்களே அலர்ட்.., ஆன்லைன் மூலம் நூதனமான முறையில் பண மோசடி.., காவல்துறை எச்சரிக்கை!!
இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் இல்லையென்றால், வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுவேன் என்று மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி கூறினார். இதை கேட்ட அந்த பெண் சிறுமியின் அப்பா மீது காவல்துறையிடம் புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பெயரில் அந்த சிறுமியின் தந்தையை காவல்துறை கைது செய்துள்ளனர்.