தமிழகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 20) ஒண்டிவீரன் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதேபோல் செப்டம்பர் 1ஆம் தேதி பூலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர்களிலிருந்து ஏராளமான தலைவர்கள் வருகை தருவார்கள்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
பழனி செல்லும் பக்தர்களே.., நாளை முதல் இந்த சேவை இருக்காது.., கோவில் நிர்வாகம் அறிவிப்பு!!
அப்போது எவ்வித சட்ட ஒழுங்கு பிரச்சனை எதுவும் நிகழாமல் இருக்க, இன்று (ஆகஸ்ட் 18) மாலை முதல் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை மற்றும் ஆகஸ்ட் 30ஆம் தேதி மாலை முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரையிலும், தென்காசியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்நாட்களில் கத்தி, அரிவாள், கற்கள் உள்ளிட்ட ஆட்சேபனைக்குரிய பொருட்களுடன் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.