பிளஸ் 2 பொதுத்தேர்வு ஜூன் மாத்திற்கு ஒத்திவைப்பு?? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!!

0
தமிழக பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட கல்வித்துறை - மீறினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பால் தற்போது 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மூடப்பட்டது. இந்நிலையில் பிளஸ் 2 வகுப்பிற்கான பொதுத்தேர்வு ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிளஸ் 2:

தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று குறைந்து வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் உயர்கல்வி வகுப்புக்கான பள்ளிகள் அனைத்தும் துவக்கப்பட்டு நடைபெற்று வந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள் இடையே கொரோனா தொற்று அதிகரித்தது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமே என்று கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு 9,10 மற்றும் 11ம் வகுப்பு பள்ளிகளுக்கு விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்தது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் 12ம் வகுப்பிற்கு மட்டும் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என்றும் பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக தஞ்சையில் பள்ளி கல்லூரிகளுக்கு அபராதம் – அரசு அதிரடி நடவடிக்கை!!

இதனால் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பிளஸ் 2 வகுப்பிற்கு பள்ளிகள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்தது வந்தனர். மேலும் பொதுத்தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என்றும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது வந்தனர். இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வை மே மாதத்தில் இருந்து ஜூன் மாதத்திற்கு ஒத்திவைப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரபூர்வ தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here