தமிழக சட்டமன்ற தேர்தல் – ராகுல்-ஸ்டாலின் ஒரே மேடையில் நாளை பிரச்சாரம்!!

0

தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி நாளை ஒரே மேடையில் பிரச்சாரம் செய்யவுள்ளனர்.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சி கூட்டணி சேர்ந்துள்ளது. சில தேர்தல் கருத்து கணிப்பு திமுக கட்சிக்கு சாதகமாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் கட்டயமான முறையில் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கில் ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் மக்களை கவரும் வகையில் பல தேர்தல் அறிக்கைகளையும் அவர் வெளியிட்டு வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் நாளை சேலம் மாவட்டத்தில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்யவுள்ளார். அங்கு நடக்கவுள்ள பிரச்சாரத்தில் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் இருவரும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்யவுள்ளனர். இவர்கள் இருவரும் நாளை சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர்.

rahul and stalin

ஏப்ரல் 1 முதல் அத்யாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு – அதிர்ச்சியில் மக்கள்!!

இந்த கூட்டத்தில் வீரமணி, அழகிரி, திருமாவளவன், வேல்முருகன், வைகோ உள்ளிட்டவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இரண்டு பெரிய கட்சி தலைவர்கள் நாளை ஒரே மேடையில் பிரச்சாரம் செய்யவுள்ளதால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here