TET தேர்வின் மூலம் 11,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு – முக்கிய மாற்றம் அறிவிப்பு!

0
TET தேர்வின் மூலம் 11,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு - முக்கிய மாற்றம் அறிவிப்பு!
தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறையில் அதிரடியாக முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. அரசு அறிவிப்பின்படி இனி மாவட்ட தேர்வு குழு தேர்வுக்கு முன்பாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தெலுங்கானா அரசு கடந்த மாதம் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதன்படி விரைவில் டெட் தேர்வுகளை நடத்துவதற்கு பள்ளிக்கல்வி ஆணையருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வின் முடிவுகள் ஆனது மாவட்ட தேர்வு குழு ஆட்சேர்ப்பில்  20% தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெட் தேர்வின் செயல்பாடுகளை விரைவுப்படுத்துவது DSC  தேர்வில் பங்கேற்பு உள்ள மாணவர்களுக்கு எளிமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த செயல்பாடு ஆனது பணியமர்த்தும் செயல்பாடுகளை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here