தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களிலும், 2023-24ஆம் கல்வியாண்டு முடிவடைய உள்ள நிலையில், ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள 11,062 இடைநிலை வகுப்பு ஆசிரியர்கள், பள்ளி உதவியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இதற்கு முன்னதாக 4,957 பணியிடங்களுக்கான அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு, புதிய அறிவிப்பில் கூடுதல் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அதன்படி தகுதியானவர்கள் நாளை (மார்ச் 4) முதல் ஏப்ரல் 2, 2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளனர். முந்தைய, ரத்து செய்யப்பட்ட அறிவிப்பில் விண்ணப்பித்து இருந்தவர்கள், இதில் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.