தமிழகத்தில் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 13ம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன்படி இந்த மாணவர்களுக்கு தற்போது செய்முறை தேர்வுகள் கடந்த வாரம் முதல் தொடங்கி, நடந்து வருகிறது. மேலும் பொதுத் தேர்வுக்கான மையம், கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் இந்த தேர்வுக்கான வினாத்தாள் அச்சடிக்கும் பணி நிறைவடைந்துள்ளதால் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வினாத்தாள் கட்டுகளை தேர்வுத்துறை இயக்குனரகம் அனுப்பி உள்ளது. இதன்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 86 தேர்வு மையங்களுக்கான வினாத்தாள் பண்டல் நேற்று முன்தினம் முதன்மை கல்வி அலுவலகத்தில் பெறப்பட்டுள்ளது.
அரசின் இந்த துறை ஊழியர்களின் ஓய்வு வயதை 58 ஆக குறைக்க கோரிக்கை., அரசின் முடிவு என்ன?
இவை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பாதுகாப்பு கிடங்கில் CCTV கேமரா கண்காணிப்புடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் காவலில் உள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். வினாத்தாள், மையத்திற்கு வந்துள்ளதால் பள்ளியின் பகுதியில் நடைப்பயிற்சி உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு, பொதுமக்களுக்கு பள்ளி நிர்வாகம் தடை விதித்துள்ளது.