தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில், நேற்று (மார்ச் 26) 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. முதல் நாளே தமிழ் மொழிப் பாடத் தேர்வு என்பதால் மாணவர்கள் பலரும் ஆர்வமுடன் தேர்வு எழுதினர். மேலும் வினாக்களை பொறுத்தவரை தெரிந்த கேள்விகள் தான் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் 33 இடங்களில் அச்சுப்பிழைகள் புரிந்து கொள்ளும் வகையில் இருந்ததாக ஆசிரியர்கள் குறிப்பிட்டு இருந்தனர். இந்த நிலையில் தமிழ் வினாத்தாளில் பிழையுடன் கேள்வி இருந்ததாக புகார் வந்துள்ளது. அதற்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை வைத்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.