பெங்களூரில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 10 மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அரசாங்கம் ஜாக்பாட் வழங்கியுள்ளது.
அரசு பள்ளி:
தமிழகம் மட்டுமின்றி எல்லா நாட்டிலும் மாணவர்களின் படிப்புக்காக அரசாங்கம் புதுப்புது திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் பெங்களூரில் உள்ள மாநகராட்சி பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்துவதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது பெங்களூர் அரசாங்கம் பத்தாவது மற்றும் பன்னிரண்டாவது படிக்கும் மாணவர்களுக்கு சந்தோஷம் தரும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது மாநகராட்சியின் கீழ் இயங்கும் 164 பள்ளிகளில் படிக்கும் பத்தாவது மற்றும் பன்னிரண்டாவது மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றால், அப்பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரையும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற வெளிநாட்டிற்கு சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வதாக அறிவித்துள்ளது. மாணவர்களின் கல்வியை தகுதியை உயர்த்துவதற்காக கொண்டு வந்த இந்த திட்டம் பள்ளி நிர்வாகத்திடம் வரவேற்பை பெற்று வருகிறது.