உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலில் கும்பாபிஷேக நிகழ்ச்சி, நேற்று (ஜன.22) வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்காக உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இறைச்சி கடைகள் மூடி இருக்க வேண்டும் என மாநில அரசுகள் உத்தரவிட்டு இருந்தது. அதேபோல் “X” சமூக வலைத்தளத்திலும் பெரும்பாலானோர் அசைவ பொருட்களை புறக்கணிப்பதில் ஆர்வம் காட்டி வந்தனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனை கருத்தில் கொண்டு நேற்று (ஜன.22) ஒரு நாள் மட்டும் உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய வட மாநிலங்களில் அசைவ உணவு விநியோகத்தை Zomato ஃபுட் டெலிவரி நிறுவனம் முடக்கி இருந்தது. இது தொடர்பாக அந்நிறுவனம் கூறுகையில், அரசாங்கம் மற்றும் பயனாளர்களின் விருப்பத்தின் பேரில், அசைவ உணவு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.” என தெரிவித்துள்ளனர்.
PKL 2024: தொடர் வெற்றியால் ஜொலிக்கும் ஜெய்ப்பூர்… முதலிடத்தை தக்கவைத்து அசத்தல்!!