யூடியூப் சேனல்களுக்கு ரிவிட் அடித்த காவல்துறை., இனி எப்படி பிராங்க் பண்றாங்கன்னு பார்ப்போம்!!

0
யூடியூப் சேனல்களுக்கு ரிவிட் அடித்த காவல்துறை., இனி எப்படி பிராங்க் பண்றாங்கன்னு பார்ப்போம்!!
யூடியூப் சேனல்களுக்கு ரிவிட் அடித்த காவல்துறை., இனி எப்படி பிராங்க் பண்றாங்கன்னு பார்ப்போம்!!

யூடியூப் சேனல்கள் அத்துமீறி பிராங்க் போன்ற செயல்களில் ஈடுபடுவதைக் சம்பந்தப்பட்டவர்கள் புகார் செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

பகிரங்க எச்சரிக்கை:

வளர்ந்து வரும் இந்த நவீன யுகத்தில் யூடியூப், பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்கள் இல்லாமல் அன்றாட தினத்தை கடத்த முடியாத, நிர்பந்தம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் யூடியூப் சேனலில் நாள்தோறும் பல்வேறு வகையான புதுப்புது வீடியோக்கள், அப்லோட் செய்யப்பட்டு வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதில் பொது மக்களை, தொந்தரவு செய்து எடுக்கப்படும் பிராங்க் போன்ற வீடியோக்களும் பதிவிடப்படுவது வழக்கம். சமீப தினங்களாக ஒரு சில யூடியூப் சேனல்கள், பிராங்க் வீடியோ வாயிலாக எல்லை மீறி நடந்து கொண்டது. இதனால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகும் சூழல் ஏற்பட்டது.

தற்போது இந்த பிராங்க் சேனல்களுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக சென்னை மாநகர காவல் துறை ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பிராங்க் வீடியோக்களால், பாதிக்கப்படுவோர், புகார் அளித்தால் நிச்சயம் அந்த சேனல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. இதனால் இது போன்ற கேளிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here