குளிக்காமலே 50 வருடத்தை கடத்திய முதியவர் திடீர் மரணம்.., வெளியான ஷாக் ரிப்போர்ட்!!

0

உலகின் அழுக்கு மனிதன் அமு ஹாஜி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஈரானில் காலமானார்.

அமு ஹாஜி

உலகில் ஒவ்வொரு நாளும் பிறக்கும் மனிதனுக்கு என்றோ ஒரு நாள் இறப்பது உறுதி. ஆனால் பழங்காலங்களில் நம் முன்னோர்கள் உணவு முறை, சுத்தம், சுகாதாரம் போன்றவற்றை பொறுத்து மனிதர்கள் நீண்ட நாட்கள் ஆயுளுடன் வாழ்ந்து வந்தனர். ஆனால் தற்போது உள்ள காலகட்டங்களில் விதவிதமான உணவுகள், சுற்றுச்சூழல் மாசு போன்றவர்களால் 50 வயதை கடப்பதை மிகவும் அரிதான ஒன்றாக உள்ளது.

அப்படியே கடந்தாலும் அவர்கள் பல நோயுடன் தினம் தினம் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரானில் ஒரு வியக்கவைக்கும் சம்பவம் நடந்துள்ளது. அது என்னவென்றால் அமு ஹாஜி என்ற 94 வயதான நபர் கடந்த 50 வருடங்களாக குளிக்காமல், உடை மாற்றாமல் வாழ்ந்து வந்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது இவர் உடல் நிலை சரியில்லாமல் போய்விடும் என்ற பயத்திலே குளிக்காமல் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 23 ஆம் தேதி உயிரிழந்ததாக ஈரானின் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் வைரலாக இதற்கு அனைவரும், 50 வருடங்கள் குளிக்காமல் எப்படி 94 வயதுடன் வாழ முடிந்தது, இது அதிசயமான ஒன்றாக உள்ளதே என விமர்சித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here