தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் விடுபட்டவர்கள் மேல் முறையீடு செய்யலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து லட்சக்கணக்கான குடும்பத் தலைவிகள் மேல்முறையீடு செய்தனர். ஆனால் இதில் ஒரு சிலருக்கு ரூ.1000 உரிமை தொகை கிடைத்த நிலையில் இன்னும் சிலர் அது விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது.
இந்த நேரத்தில் லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரம் நடைபெற்று வருவதால் மக்கள் அனைவரும் விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்குமா?? கிடைக்காதா?? என கேள்வி எழுந்துள்ளது. தற்போது இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழகத்தில் இன்னும் மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதனால் தேர்தல் முடிந்ததும் விடுபட்டவர்களுக்கு நிச்சயம் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.