நாடு முழுவதும் சிறு குறு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் PM கிசான் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.6,000 உதவித்தொகையை 3 தவணையாக, மத்திய அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில், கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி 9 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் 16 வது தவணை ரூ.2,000 வரவு வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 17வது தவணை 2024 மே மாதம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
ஆதார் பி.வி.சி கார்டை பெறுவது எப்படி?? எளிய வழிமுறைகள் இதோ!!
மேலும் இந்த தவணையை பெறுவதற்கு பி.எம்.கிசான் திட்ட விவசாயிகள் EKYC பணிகளை முடித்திருக்க வேண்டும். அதன்படி pmkisan.gov.in என்ற ஆன்லைன் போரட்டலிலோ அல்லது அருகாமையில் உள்ள இ-சேவை மையத்திலோ சென்று அப்டேட் செய்யலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.