இந்தியாவில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட ஆடவருக்கான ஐபிஎல் தொடர் 16 ஆண்டுகளை நிறைவு செய்து 17வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இத்தொடர் போலவே கடந்த ஆண்டு பிசிசிஐ நிர்வாகம் மகளிர்கான 20 ஓவர் தொடரை நடத்தியது. இதில் பெங்களூர், அகமதாபாத், மும்பை டெல்லி ஆகிய 5 அணிகள் பங்கேற்றனர். இத்தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிடஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. அதில் மும்பை அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இந்த நிலையில் 2-வது மகளிர் பிரிமியர் லீக் தொடர் இன்று (பிப்ரவரி 23) பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது. வரும் மார்ச் 17ம் தேதி வரை நடைபெறும் இத்தொடரின் முதல் 11 லீக் ஆட்டங்கள் பெங்களூருவிலும், 9 லீக் போட்டிகள் மற்றும் பிளே ஆப் சுற்றுகள் டெல்லியில் நடைபெற உள்ளன. இன்று நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதுகிறது.