சர்வதேச மகளிர் தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளதை அடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள அரசு பெண் ஊழியர்களுக்கு நாளை முழு விடுமுறை அளிப்பதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
அரசு அறிவிப்பு :
உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தின விழா மார்ச் 8ஆம் தேதியான நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, பல மாநிலங்களில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி பல மாநிலங்களில், பெண்களுக்கு சர்ப்ரைஸ் தரும் முக்கிய அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசுகள் வெளியிட திட்டமிட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த வகையில், தெலுங்கானா அரசு ரூபாய் 750 கோடி மதிப்பீட்டில் மகளிர் சுய உதவி குழு மற்றும் சுய தொழில் முனையும் பெண்களுக்கு வட்டியில்லா கடன் உதவிகளை வழங்க திட்டமிட்டுள்ளது.
இது குறித்து பேசிய தெலுங்கானா மாநில தலைமைச் செயலாளர் சாந்தி குமாரி, அரசின் பல்வேறு நலத்திட்டங்களை யும் தாண்டி, மாநிலம் முழுவதும் உள்ள அரசு பெண் ஊழியர்களுக்கு நாளை முழு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால், சம்பந்தப்பட்ட பெண் ஊழியர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.