இன்றைய நவின காலகட்டத்தில் மொபைல் பயன்படுத்தும் பெரும்பாலானவர்கள் வாட்ஸ்அப் செயலியையும் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கேற்ப பயனாளர்களை கவரும் வகையில் பல்வேறு புதுப்புது அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தி கொண்டே வருகிறது. அந்த வகையில் அண்மைக்காலமாக வாட்ஸ்அப் மூலம் குரல் அழைப்பு மேற்கொள்ளும் போது, முன்பிருந்ததை போல் சீர்குலைவு இல்லாமல் குறைவானவையே பதிவாகி வருகிறது.
TNPSC குரூப் 4 தேர்வுகள்…, உங்களுக்காகவே வெளியான முக்கிய அறிவிப்பு…, மிஸ் பண்ணிடாதீங்க!!
இதைத்தொடர்ந்து ஒரு குழுவில் 32 பேர் மட்டுமே குரல் அழைப்பு செய்யும் படி உள்ள வசதியை நீடிக்க வாட்ஸ்அப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி Notification மூலம் கொடுக்கப்படும் இந்த குரல் அழைப்பில் 33 முதல் 128 பேர் வரை இணைக்கலாம் என தெரிவித்துள்ளனர். இருந்தாலும் இந்த வசதியை பெற குழுவில் 33 க்கும் அதிகமாக பயனாளர்கள் இருக்க வேண்டும். இந்த அம்சம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.