whatsapp பயனர்கள், நிறுவனம் வகுத்துள்ள கொள்கையை மீறி Status போன்றவற்றில் தவறான தகவல்களை வைத்தால், இது குறித்து புகார் அளிக்கலாம் என மெட்டா அறிவித்துள்ளது.
மெட்டா அறிவிப்பு :
உலகெங்கும் உள்ள பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ்அப். சமீப காலமாக இந்த whatsapp ல், கணக்கில் அடங்காத பல அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அனுப்பிய மெசேஜை எடிட் செய்யும் வசதி, kept message அப்டேட் மூலம் disappearing மெசேஜை மீண்டும் படிப்பது, வாய்ஸ் மெசேஜை எழுத்துருவாக மாற்றுவது போன்ற பல அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த வகையில், whatsapp பயனர்களின் தனியுரிமை கொள்கைகளை பாதுகாப்பது குறித்து முக்கிய அப்டேட் வழங்கப்பட உள்ளது. அதாவது whatsapp பயனர்கள், ஸ்டேட்டஸ் போன்றவற்றில் தங்கள் தனியுரிமைக் கொள்கையை மீறுவதாக கருதினால், சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்.
ரேஷன் பயனர்களுக்கு ஜாக்பாட். இந்த பொருள் எல்லாம் freeயா வரப்போகுது! அரசின் சூப்பர் திட்டம்!!
இந்த புகாரை மதிப்பீட்டாளர் குழு மதிப்பீடு செய்து, தவறு இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். அதுமட்டுமில்லாமல் பயனர்களின் அனைத்து தனியுரிமைகளும் end-end-description மூலம் பாதுகாக்கப்படும் எனவும் மெட்டா உறுதி அளித்துள்ளது. எனவே பயனர்கள், மறந்தும் மெட்டா விதிகளுக்கு புறம்பான செயல்களை செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.