பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான வாட்ஸ் அப்பில் 5க்கும் மேற்பட்ட பல புதிய அப்டேட்கள் விரைவில் களமிறங்க உள்ளது.
புது அப்டேட்:
உலகெங்கும் உள்ள பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும், சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ்அப். தற்போது இதில் 5க்கும் மேற்பட்ட பல புதிய அப்டேட்டுகளை வழங்க மெட்டா நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. முதலாவதாக, நாம் இந்த ஆப் வாயிலாக பைல்கள் மற்றும் டாக்குமென்ட்களை அனுப்பும் போது அவற்றில் பேக்ரவுண்ட் மற்றும் அலைன்மென்ட் ஆகியவற்றோடு font அமைப்பையும் எடிட் செய்யும் வசதியை விரைவில் வழங்க உள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதைத்தொடர்ந்து, community குரூப் செய்திகளுக்கு எமோன்ஜி மூலம் ரியாக்ட் செய்யும் வசதி அறிமுகமாக உள்ளது. இந்த வசதி இதற்கு முன், ios பயனர்களுக்கு மட்டுமே அப்டேட்டில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இது போக, Text editor மற்றும் drawing tool என்ற புதிய அப்டேட்டுகள் அறிமுகமாக உள்ளதால், இதை வைத்து பயனர்கள் மெசேஜ் Text செய்யும் போதே, அதன் font ஐ மாற்றுவது பேக்ரவுண்ட் கலர் மற்றும் மெசேஜை ஹைலைட் செய்வது போன்ற வசதிகளை செய்து கொள்ளலாம்.
இந்த மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் மது விற்பனைக்கு தடை.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!
இதுபோக, நாம் அனுப்பும் வீடியோ மற்றும் இமேஜ் ஆகியவற்றின் தரம் குறையாமல் இருக்க புது வசதியை வாட்ஸ்அப் வெளியிட உள்ளது. கடைசியாக, வாட்ஸ்அப் குரூப்பில் 25 எழுத்துக்களை மட்டுமே நம்மால் தலைப்பாக வைக்க முடியும். ஆனால் இனி வரப் போகும் அப்டேட்டால் 100 எழுத்துக்களுக்கு மேல் நம்மால் தலைப்புகளை வைக்க முடியும். இதன் மூலம் பயனர்களுக்கு அந்த குரூப்பின் முழு விவரமும் தலைப்பிலேயே புரிந்துவிடும். இந்த 5 தரமான அப்டேட்டுகளும் ஒன்றன்பின் ஒன்றாக பயனர்களுக்கு வழங்கப்பட உள்ளது.