இந்த மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் மது விற்பனைக்கு தடை.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!

0
இந்த மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் மது விற்பனைக்கு தடை.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!
இந்த மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் மது விற்பனைக்கு தடை.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!

நாடு முழுவதும் வடலூர் இராமலிங்க அடிகளார் (வள்ளலார்) நினைவு தினம் நாளை (பிப்ரவரி 5) அனுசரிக்கப்படுகிறது. இவர் ஆன்மீக கருத்துக்கள் மட்டுமில்லாமல் வாழ்க்கைக்கான நெறிமுறை கருத்துக்களையும் இவ் உலகிற்கு எடுத்துரைத்துள்ளார். இதனால் இவரின் நினைவு தினத்தை அனுசரிக்கும் பொருட்டு கடலூர், சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள வள்ளலார் மடத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் மாவட்டங்களில் முக்கிய தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு தினங்களை அனுசரிக்கும் பொருட்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நாளை கோவை மாவட்டத்தில் வடலூர் இராமலிங்க அடிகளார் நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்து வித டாஸ்மாக் மதுபானக் கடை மற்றும் பார்கள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஆலமர விழுது போல உங்க முடி தரையை தொடணுமா?? உங்களுக்கான பாட்டி வைத்தியம் இதோ!!

மேலும் தடையை மீறி மதுபானங்கள் விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்துள்ளார். இன்றைய நாள் தைப்பூசம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here