இந்த மாநிலத்தின் அலங்கார ஊர்திக்கு குடியரசு தின அணிவகுப்பில் அனுமதி இல்லை – மோடியின் முடிவால் முதல்வர் அதிர்ச்சி!!

0

வருகிற ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்பட உள்ள இந்திய திருநாட்டின் குடியரசு தினவிழா,  அணிவகுப்பில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அலங்கார ஊர்தி பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதை அம்மாநில முதல்வர் கடுமையாக எதிர்த்து உள்ளார்.

அனுமதி மறுப்பு :

இந்திய திருநாட்டின் குடியரசு தின விழா வருகிற ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் நடைபெறும் இந்த விழாவில் மாநிலங்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், மாநிலத்தின் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெறும். இந்த ஆண்டு, நடைபெற உள்ள அலங்கார ஊர்தி அணிவகுப்பில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அலங்கார ஊர்தி பங்கேற்க அனுமதி மறுக்கப்படுவதாக மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தின் ஊர்திக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு எவ்வித காரணமும் தெரிவிக்காமல் இருப்பது மக்களை குழப்பம் அடைய செய்திருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.

வங்கத்தில் இருந்து சுதந்திர போரில் கலந்து கொண்ட போராளிகளின் தியாகங்களை மூடி மறைக்க முயற்சிக்கும் இந்த எண்ணத்தை மத்திய அரசு கைவிட்டு, இந்த முடிவு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here