மாநிலம் முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளில் வருகிற மார்ச் 17ம் தேதி இரவு மட்டும், இரவு நேர ஊரடங்கை தளர்த்துவதாக மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.
அரசு உத்தரவு:
இந்தியாவில் கொரோனாவின் டெல்டா மற்றும் ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. இதனால், தமிழகம், புதுவை, குஜராத், டெல்லி, ராஜஸ்தான், தெலுங்கானா ஆந்திரா, ஒடிசா, கேரளா, இமாசலப் பிரதேசம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில், இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, பல மாநிலங்களில் வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்தது. இதனால், மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் வாபஸ் பெறப்பட்டது.
அதுபோல பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மேற்கு வங்க மாநிலத்தில், இன்னும் ஒரு சில இடங்களில் வைரஸ் பரவல் குறையாததால், இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இங்கு வருகிற மார்ச் 17ஆம் தேதி ஹோலிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், இந்த நாளில் மட்டும் இரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு மேற்கு வங்கத்தில் வாபஸ் பெறப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பை அடுத்து பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்து உள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்