தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பால் தட்டுப்பாடு நிலவி வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஆவின் பால்பண்ணைகளை ஆய்வு செய்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது “பால் விற்பனையாளர்களின் கோரிக்கையான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவதற்கான நடவடிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் பால் விவசாயிகளுக்கான கடன் உதவி, கால்நடை தீவனங்கள் உள்ளிட்டவை விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது போக அதிக அளவில் பால் உற்பத்தி கட்டமைப்பை பெருக்கும் விவசாயிகளுக்கு 2 லட்சம் கறவை மாடுகள் வழங்கவும் திட்டமிட்டு வருகிறோம்.” என தெரிவித்துள்ளார்.