தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு நடுவே பல மாவட்டங்களில் இப்போது பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து பல்வேறு பகுதிகளில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று இரவு தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளனர்.