தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக மூன்று மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மிதமான மழை..!
கோடைகாலம் ஆரம்பமாக உள்ள நிலையில் வெப்பநிலை பல இடங்களில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வெப்பச் சலனம் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம்..!
அதை தொடர்ந்து திண்டுக்கல், மதுரை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி போன்ற மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஓரளவுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |