தற்போது நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாளை முதல் 3 நாள்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் ஆகிய இடங்களில் கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
10 மாவட்டங்களில் மழை:
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட தகவலின்படி இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
மேலும் புதுச்சேரி – காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செப் 27 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலின் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்