இரண்டு நாட்கள் தண்ணீர் விநியோகம் இருக்காது..! சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தல்!!!

0

தெலுங்கானா தலைநகரம் ஹைதராபாத்தில் இரண்டு நாட்கள் தண்ணீர் விநியோகம் தடைபடும் என்று ஹைதராபாத் பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் கூறியுள்ளது. எனவே பொதுமக்களை தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும் அறிவுறுத்தி உள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது சம்மந்தமாக ஹைதராபாத் பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம்  கூறியதாவது, மஞ்சீரா ஜுங்ஷனில் நீர்க்கசிவு ஏற்படுவதால், சீரமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளது.அதனால் மே 27 ஆம் தேதி காலை 6 மணி முதல் மே 28 ஆம் தேதி மாலை 6 மணி வரை நகரின் பல இடங்களில் தண்ணிர் வழங்கல் தடைபடும். தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்க தண்ணீரை நியாயமான முறையில் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக அவ்வாரியம் கூறியுள்ளது.

 

மேலும் அவ்வாரியம் தண்ணீர் தடைபடும் பகுதிகளின் பட்டியலையும் வெளியிட்டு உள்ளது. அதில் கங்காரம், கே.எஸ்.ஆர் என்க்ளேவ், மதிநகுடா, ஆதர்ஷ் நகர், சுல்தான்பூர், ராம் நரேஷ் நகர், பொல்லர் நகராட்சி, இல்லப்பூர் கிராமம், எஸ்சி போஸ் நகர், சிர்லா கார்டன்ஸ், ஆர்.பி.ஆர் பாலாஜி நகர், ஆதித்யா நகர், ஸ்ரீரங்கபுரம் மற்றும் இதர சில பகுதிகள் அடங்கியுள்ளன.

ஹைதராபாத் பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்திடம் கடந்த 18 நாட்களில் சட்ட விரோதமாக சிலர் தண்ணிரை பெறுவதாக 834 புகார்கள் வந்துள்ளன. எனவே பொதுமக்கள் தாமாகவே முன்வந்து அவ்வாறு செய்பவர்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவேண்டும். இதுகுறித்து புகார் அளிக்க மக்கள் இந்த எண்ணை 998999100, 9989992268 தொடர்புகொள்ளலாம் என ஹைதராபாத்தின் பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here