சூர்யகுமாரின் டக் அவுட்டால் முதன்மை தேர்வாக மாற இருக்கும் சஞ்சு சாம்சன்”…, வாசிம் ஜாஃபர் ஓபன் டாக்!!

0
சூர்யகுமாரின் டக் அவுட்டால் முதன்மை தேர்வாக மாற இருக்கும் சஞ்சு சாம்சன்
சூர்யகுமாரின் டக் அவுட்டால் முதன்மை தேர்வாக மாற இருக்கும் சஞ்சு சாம்சன்"..., வாசிம் ஜாஃபர் ஓபன் டாக்!!

இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து சொதப்புவதால், சஞ்சு சாம்சனுக்கான வாய்ப்பு குறித்து வாசிம் ஜாஃபர் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

வாசிம் ஜாஃபர்:

இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளனர். இதனால், 3வது ஒருநாள் போட்டியின் முடிவை பொறுத்தே தொடரை வெல்லும் அணி எது? என தீர்மானிக்க முடியும்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் மிட்செல் ஸ்டார்க் பந்தில் டக் அவுட்டாகி பெரும் ஏமாற்றத்தை தந்தார். முதுகு வலி காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் இந்த தொடரில் இருந்து விலகியதால் தான், சூர்யகுமார் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பிடித்தார். ஆனால், கிடைத்த வாய்ப்பையும் சூர்யகுமார் யாதவ் பயன்படுத்த தவறி வருகிறார். இதனால், சஞ்சு சாம்சனுக்கு தற்போது ஆதரவு அதிகரித்து வருகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மாற்றம்…, 3 வது இடத்தை இழந்த இலங்கை!!

இந்த வகையில், இந்தியாவின் முன்னாள் வீரரான வாசிம் ஜாஃபர் 3வது ஒருநாள் போட்டியில், சூர்யகுமாருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கிறதா? என பார்க்க வேண்டும். அதிலும், சூர்யகுமார் யாதவ் சொதப்பினால், சஞ்சு சாம்சன் இந்திய அணியின் முதன்மை தேர்வாக திகழ்வார் என வாசிம் ஜாஃபர் கூறியுள்ளார். மேலும், சஞ்சு சாம்சனுக்கு கிடைப்பது குறைந்த வாய்ப்பு தான் என்றாலும், அதனை சிறப்பாகவே கையாண்டு வருகிறார் என வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here