“விஜே சித்ரா மரணத்திற்கு காரணம் இவங்க தான்” –  கணவர் ஹேமந்த் போலீசில் பரபரப்பு புகார்!!

0
"விஜே சித்ரா சாவுக்கு காரணம் இவங்க தான்" -  லிஸ்ட் போட்ட கணவர் ஹேமந்த்! போலீசில் பரபரப்பு புகார்!!

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை பாத்திரத்தில் நடித்து வந்த, விஜே சித்ரா மரணத்தின் பின்னணி குறித்த பகீர் தகவல் ஒன்றை, அவரது கணவர் ஹேமந்த் புகாராக தெரிவித்துள்ளார்.

பகீர் தகவல்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், முல்லை என்ற பாத்திரத்தில் நடித்தவர் விஜே சித்ரா. இந்த கதாபாத்திரத்தின் மூலம், விஜய் டிவியின் ஸ்டாராக இவர் விளங்கினார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு, ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின், தற்கொலைக்கு காரணமானவர் இவர் கணவர் ஹேமந்த் தான் என, போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர், அவர் கடந்த ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தார்.

தற்போது இவர் போலீசில், பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது, சுப்பா ராவ், சரோஜா ராவ், மதுசூதனன், சாய் வெங்கடேஷ், யாமினி, இமானுவேல் ராஜ் உள்ளிட்ட 7 நபர்கள் தன் மனைவியின் இறப்புக்கு காரணமாக இருந்த மாபியா கும்பலிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், அதற்கு துணையாக நான் இல்லாததால் என்னை கொன்று விடுவதாக கூறி கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தன் உயிருக்கு ஆபத்து இருப்பதால் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here