உத்திரப் பிரதேச மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தில் ஒரு கிராம தலைவர் இறப்பு சான்றிதழில் ‘ஒளிமயமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள்’ என எழுதி கையெழுத்திட்ட சம்பவம் நடைபெற்று உள்ளது.
இறப்பு சான்றிதழில் வாழ்த்து..!
ஜனவரி 22 அன்று உன்னாவ் மாவட்டத்தின் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்து உள்ளார். அதனால் பணபரிவர்த்தனை போன்றவற்றிற்காக இறப்பு சான்றிதழ் கேட்டு அந்த கிராமத்தின் தலைவர் பாபுலாலை அணுகி உள்ளனர். அவரோ இறப்பு சான்றிதழில்,
‘இவருடைய ஒளிமயமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள்’ என எழுதி கையெழுத்திட்டு வழங்கியுள்ளார்.
தற்போது அந்த சான்றிதழ் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இறப்பு சான்றிதழில் வாழ்த்து கூறிய கிராம தலைவரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |