கமலின் செயலால் நெகிழ்ந்து போன லோகேஷ் கனகராஜ் – நன்றி ஆண்டவரே என உருக்கமான பதிவு!!

0
கமலின் செயலால் நெகிழ்ந்து போன லோகேஷ் கனகராஜ் - நன்றி ஆண்டவரே என உருக்கமான பதிவு!!
கமலின் செயலால் நெகிழ்ந்து போன லோகேஷ் கனகராஜ் - நன்றி ஆண்டவரே என உருக்கமான பதிவு!!

விக்ரம் படத்தின் வெற்றியால், நெகிழ்ந்து போன உலக நாயகன் கமல் லோகேஷ் கனகராஜுக்கு தம் கைப்பட எழுதிய கடிதத்தை இயக்குனர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நன்றி கூறிய இயக்குனர் :

உலகநாயகன் கமல் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி, ஜூன் 3ம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம். இந்த படம் தொடர்ந்து, வசூலை வாரி குவித்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த கமல், இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு நன்றி தெரிவித்து தம் கைப்பட ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதாவது, அன்பு லோகேஷ், பெயருக்கு முன்னால் திரு போடாமல் எழுதியது உங்கள் மீதான உரிமையை நான் எடுத்துக் கொண்டேன் என்பதற்கு சான்று.

உங்களைப் பாராட்ட வார்த்தை இல்லை என நான் உட்பட யார் சொன்னாலும் நம்ப வேண்டாம், உங்களின் இந்த பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள், உங்கள் அன்ன பாத்திரம் என்றென்றும் நிறைந்திருக்கும், என்றும் உங்கள் நான் என உருக்கமாக எழுதியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை பகிர்ந்த லோகேஷ், இதுதான் எனது லைஃப் டைம் அச்சீவ்மென்ட்  என கூறி நன்றி ஆண்டவரே என்று பதிவிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here