அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடல்., இந்த பகுதியில் வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது!!

0
அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடல்., இந்த பகுதியில் வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது!!
அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடல்., இந்த பகுதியில் வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது!!

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை 9 மணி அளவில் உடல் நலக்குறைவால் காலமானார். இவரது இறப்பு தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இவரது உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 6 மணியில் இருந்து மதியம் ஒரு மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இதன் காரணமாக தீவுத்திடல் பகுதியில் மட்டும் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விஜயகாந்த் உடல் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளதால் சென்னை காமராஜர் சாலையில் இருந்தும், மன்றோ சிலை மற்றும் சென்ட்ரல் வழியாக தீவு திடலுக்கு செல்ல வேண்டாம் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும் இந்த பகுதியில் இன்று வாகனங்களுக்கு அனுமதி கிடையாது எனவும் தெரிவித்துள்ளனர்.

தமிழக மக்களே உஷார்.., இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை.., வானிலை மையம் பகீர்!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here