பிகில் திரைப்பட வசூல் விவகாரம் தொடர்பாக ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்கள் மற்றும் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு ஆகியவற்றில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 24 கோடி பணம் மற்றும் தங்க நகைகளை கைப்பற்றினர்.
விஜய் வீட்டில் சோதனை..!
நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பின் போது வருமானவரித்துறையினர் அங்கு வந்து விஜயிடம் சம்மன் அளித்து அவரை சென்னையில் உள்ள அவரது சொந்த பண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து விடிய விடிய சோதனை நடத்தினர். சென்னை சாலிகிராமம், நீலாங்கரை மற்றும் பனையூரில் உள்ள விஜய்யின் வீடுகளில் வருமானவரித்துறையின் 8 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தினர்.
இந்த சோதனைகளால் மாஸ்டர் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருந்தது. இன்றும் இந்த விசாரணை நடந்து வருவதால் இன்றும் படப்பிடிப்பு நடைபெறாது என கூறப்படுகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |