விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்த சிறப்பு பிரார்த்தனை – கிடாய் வெட்டி விருந்து வைத்து நேர்த்திக்கடன்!!

0

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கிடாய் வெட்டி விருந்து வைத்து, விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்த பிரார்த்தனை, இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.

விஜய் மக்கள் இயக்கம்:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது. பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர், நிச்சயம் போட்டியிடுவர் என அதன் பொதுச் செயலாளர் அண்மையில் அறிவித்தார்.

தற்போது இந்த தேர்தலில், அவர்கள் 100 வார்டுகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுபோக இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, மதுரை பாண்டி கோவிலில் கிடாய் வெட்டி விருந்து வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். ஏற்கனவே, ஊரக உள்ளாட்சி தேர்தலில், 115 இடங்களில் கைப்பற்றி பெரு வெற்றி பெற்றனர். தற்போது,  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எத்தனை இடங்களை கைப்பற்றி வெற்றி பெறுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here