அஜித்குமார் நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின்னர் எச்.வினோத் இயக்கிவரும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் ஷுட்டிங் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் நிறுத்தி வைக்கபட்டு உள்ளது.
அஜித்திற்கு வில்லன் கொரோனா..!
அஜித்குமார் தற்போது எச்.வினோத் இயக்கிவரும் வலிமை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.
இதுவரை ஹைதராபாத்தில் ஷுட்டிங் நடந்து முடிந்துவிட்ட நிலையில் அதன் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக வலிமை டீம் வெளிநாடு சென்று பிரம்மாண்ட சண்டைக் காட்சிக்காக ஷுட் செய்ய இருந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக ஷுட்டிங்கை சில மாதங்கள் தள்ளிவைக்க முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது .
படப்பிடிப்பு ரத்து..!
ஸ்பெயின், மொரோக்கோ உள்ளிட்ட நாடுகளில் மிக வித்தியாசமான இடங்களில் காட்சிகளை எடுக்க முடிவு செய்திருந்தார் எச்.வினோத். ஆனால் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஷுட்டிங் தள்ளி வைக்கபட்டுள்ளது. இதேபோல் ரஜினியின் அண்ணாத்த ஷூட்டிங்கும் ரத்தானது குறிப்பிடத்தக்கது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |